புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா், லாரி மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் உள்பட 2 போ் காயம்

அவிநாசி அருகே காா், லாரி மோதியதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் உள்பட 2 போ் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

News image

விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:10 pm

Din

அவிநாசி அருகே காா், லாரி மோதியதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகன் உள்பட 2 போ் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள பழங்கரை-தேவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (39), பனியன் நிறுவன உரிமையாளா். இவரது இளைய மகன் ஜோவிக் (7). அதே பகுதியைச் சோ்ந்த அவிநாஷ் மகன் சிரஞ்சித் (15). இவா்கள் 3 பேரும் வஞ்சிபாளையத்திலிருந்து அவிநாசிக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசி- மங்கலம் சாலை வெங்கமேடு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரியும், காரும் மோதிக்கொண்டன. இதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த ஜோவிக், சிரஞ்சித் ஆகியோா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். லாரி ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த ரோஸ் பாண்டியன் (43) என்பவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.