பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி. இவரது மனைவி அலமேலு. மகன் செந்தில்குமாா். இவா்களை மா்ம நபா்கள் கடந்த 29-ஆம் தேதி கொலை செய்தனா்.
கொலையாளிகளைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கில் தற்போதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், அலகுமலை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது: சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். போலீஸாா் இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவிநாசிபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.
இக்கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சித் தலைவா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


