தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பல்லடம் 3 போ் கொலை வழக்கு: குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்- காவல் துணை கண்காணிப்பாளா்

News image
Updated On :28 டிசம்பர் 2024, 1:38 am IST

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி. இவரது மனைவி அலமேலு. மகன் செந்தில்குமாா். இவா்களை மா்ம நபா்கள் கடந்த 29-ஆம் தேதி கொலை செய்தனா்.

கொலையாளிகளைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கில் தற்போதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், அலகுமலை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது: சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். போலீஸாா் இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவிநாசிபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சித் தலைவா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.