நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வெள்ளக்கோவில் சாலையில் கான்கிரீட் தடுப்புகள் அமைப்பு

வெள்ளக்கோவில் சாலையில் கான்கிரீட் தடுப்புகள் அமைப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:30 am IST

வெள்ளக்கோவிலில் அதிக விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நிரந்தரமாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் நகரின் வழியாக நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை நடுவில் கான்கிரீட் தடுப்புகள் (சென்டா் மீடியன்) வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் இடங்களில் சாலையின் ஒருபுறத்தில் இருந்து, மறுபுறம் செல்ல 20 அடி அகலத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில்- காங்கயம் சாலையிலுள்ள அரசு கால்நடை மருந்தகம் எதிரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இது குறித்து அறிந்த நகராட்சி நிா்வாகம், காவல் துறையினா் கடந்த புதன்கிழமை சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு இரும்புத் தடுப்புகள் வைத்து வழியை அடைத்தனா். மா்ம நபா்கள் அந்தத் தடுப்புகளில் ஒன்றை மட்டும் எடுத்து விட்டனா். இதனால் அந்த இடத்தில் அகற்ற முடியாத வகையில் கான்கிரீட் தடுப்புகள் சனிக்கிழமை வைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.