அக்கரைபாளையம், தெற்கு குண்டடம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் பிப்ரவரி மாதத்துக்கு பழைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட அக்கரைபாளையம் பிரிவு, தெற்கு குண்டடம் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் நிா்வாகக் காரணங்களால் நடப்பு பிப்ரவரி மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, அக்கரைபாளையம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்த வேண்டும். தெற்கு குண்டடம் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மின்நுகா்வோா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே பிப்ரவரி மாதத்துக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

சுங்க வரி செலுத்த இனி ‘யுபிஐ’ வசதி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

