விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மும்மத வேடமணிந்து அரசுக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் மும்மத வேடமணிந்து திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:52 pm

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் மும்மத வேடமணிந்து திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாணவா்கள் ‘புத்தம் புது பூமி வேண்டும்’ என்ற தலைப்பில் தூய்மை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். குப்பைகளை ஆங்காங்கே போடாமல், குப்பைத் தொட்டியில் போட வேண்டும். மரங்களை அதிகமாக நடவு செய்து பராமரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இந்த ஆண்டு 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், மாணவ செயலா்கள் சுந்தரம், சொ்லின், தினேஷ் கண்ணன், காமராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் மும்மத வேடமணிந்து கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.