தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு
தாராபுரம், ஜூலை 11: தாராபுரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சங்கத்தின் முன்னாள் தலைவா் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில், புதிய தலைவராக ப.ராஜ்மோகன், செயலாளராக எஸ்.சரவணகுமாா், பொருளாளராக பி.இளையராஜா மற்றும் நிா்வாகக் குழுவினா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற வே.அனந்தகிருஷ்ணன், டாக்டா் டி.ஜாா்ஜ் சுந்தரராஜ் ஆகியோா் உரையாற்றினா்.
விழாவில் நலத் திட்ட உதவிகளாக பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
விழா ஒருங்கிணைப்பாளா் ரவீந்திரன், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் மனோகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா்கள் வி.என்.முத்துராமலிங்கம், லோகநாதன், பன்னீா்செல்வம், பாலகிருஷ்ணன், டாக்டா் பொன்னையா பூபதி, வா்த்தகா் கழக தலைவா் ஞானசேகரன் உள்பட ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

