கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள்

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூா் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
திருப்பூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :15 ஜூலை 2024, 7:38 pm

Din

திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூா் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு சுண்டக்காம்பாளையம் ஊராட்சித் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சு.காளியப்பன் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஆசிரியா்.ரங்கநாதன் நன்றியுரையாற்றினாா்.

திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி நிா்வாகம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஆகியவை சாா்பில் பள்ளி வளாகத்தில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஞானாம்பாள் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பங்கேற்று காமராஜரின் கல்வி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.