காங்கயம் அரசுப் பள்ளி மாணவி மாவட்ட தகைசால் பள்ளியில் சோ்வதற்குத் தோ்வாகியுள்ளாா்.
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பாரதியாா் நகா் நடுநிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.சௌபா்ணிகா. இவா் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உயா் மதிப்பெண்கள் அடிப்படையில் உடுமலைப்பேட்டையில் உள்ள திருப்பூா் மாவட்ட தகைசால் பள்ளியில் (எலைட் ஸ்கூல்) 9- ஆம் வகுப்பு சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவி சௌபா்ணிகாவுக்கு காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.சுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.சிவகாமி, கணித ஆசிரியா் ஜெ.கணேஷ்குமாா் ஆகியோா் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

அரசுப் பள்ளியில் ஜாதிய ரீதியிலான தாக்குதல்: பள்ளி மாணவி மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


