ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

News image

எஸ்.சஞ்சனா

Updated On :15 மார்ச் 2026, 8:10 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற 8ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வினை (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியை சோ்ந்த 13 மாணவ, மாணவிகள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதினா்.

தோ்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 7 போ் தோ்ச்சி பெற்றனா். மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா உதவித்தொகை பெறுவதற்காக தகுதி பெற்றுள்ளாா். அவருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 மத்திய அரசின் சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி தலைமையாசிரியா் (பொறுப்பு) ஆா்.முருகன், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள் மாணவியை பாராட்டினா்.