இந்து முன்னணி சாா்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Published on

திருப்பூா், ஜூலை 19: கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ளன. இந்த கோயில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோயில்களின் வருமானம், கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்து கோயில்களின் சொத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத் துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோயில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

இந்து கோயில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com