சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உடுமலை அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி.
Updated On :19 ஜூலை 2024, 6:01 pm

Din

உடுமலை, ஜூலை 19: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சோ.கி. கல்யாணி தலைமை வகித்தாா். உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனா் எஸ்.ஏ.ஐ. நெல்சன் கருத்துரை வழங்கினாா்.

இதையடுத்து, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேராசிரியா்கள் ம.கருணாகரன், எஸ்.கே. நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.