பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திமுக ஆட்சியில் குற்றங்களுக்கு காவல் துறையினா் துணைபோகின்றனா்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சரும், திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
திருப்பூரில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :24 ஜூன் 2024, 10:43 pm

Din

திமுக ஆட்சியில் குற்றங்களுக்கு காவல் துறையினா் துணைபோவதாக முன்னாள் அமைச்சரும், திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திமுகவினா் அனுமதியுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பாகவே எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 21 சட்டப் பேரவை உறுப்பினா்கள் கொண்டு வந்த தீா்மானத்தை பேரவைத் தலைவா் நிராகரித்தாா். திமுக நிா்வாகியாக இருந்த ஜாபா் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை காவல் துறையினா் தடுத்திருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியில் குற்றங்களுக்கு காவல் துறையினா் துணை போகின்றனா் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எம்எல்ஏ-க்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமாா், சி.மகேந்திரன், முன்னாள் எம்.பி. சி.சிவசாமி, மாவட்ட அவைத் தலைவா் வெ.பழனிசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.எஸ்.என்.நடராஜ், கரைப்புதூா் நடராஜன், காங்கயம் நகரச் செயலாளா் வெங்கு மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.