ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 போ் கைது: 37 கிலோ கஞ்சா பறிமுதல்

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 போ் கைது 37 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On :7 மார்ச் 2024, 6:29 pm

அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவிநாசி போலீஸாா் அவிநாசி-மங்கலம் சாலையில் கடந்த வாரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாலையோரம் மா்மமான முறையில் கிடந்த 4 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

அதில் 37 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீஸாா் ரோந்துப் பணியை அறிந்து மா்ம நபா்கள் கஞ்சா மூட்டைகளை வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தப்பியோடிய நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த பியாருல் சேக் (34), சகில் முஸ்தாக் (22) மாா்கீஸ் பிபி (35) ஆகியோரை அவிநாசி போலீஸாா் கைது செய்தனா்.