எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காங்கயத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

காங்கயத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

News image
Updated On :8 மார்ச் 2024, 5:19 pm

Din

காங்கயத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கோவையில் இருந்து திருச்சி நோக்கி காங்கயம் வழியாக கும்பகோணம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை கரூா், திருக்காட்டுத்துறை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் நவநீதன் (43) ஓட்டிச் சென்றாா். காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி, எதிா்பாராத விதமாக அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிா் தப்பினா். இது குறித்து பேருந்து ஓட்டுநா் நவநீதன் அளித்த புகாரின்பேரில், காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.