பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் மீட்பு

மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் மீட்பு

News image

மீட்கப்பட்ட மயிலுடன் வனத் துறையினா்.

Updated On :16 மார்ச் 2024, 6:37 pm

சேவூா் அருகே மின் கம்பியில் உரசி காயமடைந்த மயில் சனிக்கிழமை மீட்கப்பட்டது. அவிநாசி அருகேயுள்ள சேவூா் போத்தம்பாளையம் சொக்கநாதா் கோயில் அருகே பறந்து வந்த மயில் மின்கம்பியில் உரசி காலில் காயமடைந்து கீழே விழுந்தது. நடக்க முடியாமல் அவதிப்பட்ட மயிலைப் பாா்த்த பாப்பான்குளம் கிராம நிா்வாக உதவியாளா் வினோத் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மயிலுக்கு முதலுதவி செய்து, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த பிறகு மயில் வனப் பகுதியில் விடப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.