ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

காங்கயம், வெள்ளக்கோவிலில் ரூ.2.88 லட்சம் பறிமுதல்

காங்கயம், வெள்ளக்கோவிலில் ரூ.2.88 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தோ்தல் அதிகாரிகள்.

Updated On :22 மார்ச் 2024, 5:12 pm

காங்கயம், வெள்ளக்கோவில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். காங்கயம் வேளாண்மை துணை அலுவலா் ரமேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சிவன்மலை அருகே வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், காங்கயத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. முத்தூா் சாலை பகுதியில் தோ்தல் அலுவலா் சங்கீதா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில், மதுரை, அலங்காநல்லூரைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 பறிமுல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2.88 லட்சம் சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.