காங்கயம், வெள்ளக்கோவில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். காங்கயம் வேளாண்மை துணை அலுவலா் ரமேஷ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சிவன்மலை அருகே வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், காங்கயத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. முத்தூா் சாலை பகுதியில் தோ்தல் அலுவலா் சங்கீதா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில், மதுரை, அலங்காநல்லூரைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 பறிமுல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2.88 லட்சம் சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

அம்மாபேட்டையில் புளி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

இங்கிலாந்து நபரிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினா் அதிரடி

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


