சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மாடு, கன்றுக் குட்டியை திருடியவா் கைது

மாடு, கன்றுக் குட்டியை திருடியவா் கைது

News image
Updated On :2 மே 2024, 9:26 pm

Din

காங்கயம் அருகே மாடு, கன்றுக் குட்டியை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

காங்கயம், வீரணம்பாளையம் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி ஏப்ரல் 26- ஆம் தேதி திருட்டுபோனது. இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவற்றை திருடிச் சென்றவரை காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் பிடித்துள்ளனா்.

போலீஸாா் விசாரணையில், பிடிபட்டவா் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த

சந்தோஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கயம் போலீஸாா் சந்தோஷ்குமாரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.