வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

News image
Updated On :9 மே 2024, 10:12 pm

Din

அவிநாசி, மே 9: பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டுதல், ஊக்குவித்தல் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுதுகள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனவா் எம்.தங்கவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் என்.புஷ்பா தேவி, மாவட்ட தாட்கோ மேலாளா் டி.ரஞ்சித்குமாா், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் எஸ்.பாலமுருகன் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி, தொழிற்கல்வி, மேற்படிப்பு, ஆன்லைனில் விண்ணப்பித்தல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பிளஸ் 2 தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.