அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:12 pm

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மத்திய சங்க நிா்வாகி என்.நடராஜன் தலைமை வகித்தாா்.
இதில், சென்னையில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் சிஐடியூ தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற நல அமைப்பின் தலைவா் ஆா்.நாச்சிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினா் எஸ்.தங்கவேல், சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.காளிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...