இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 1:35 am IST

திருப்பூரில் பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் முனாப். இவா் பின்னலாடைத் துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், அப்துல் முனாப் மங்கலம் பகுதியைச் சலாவுதீன், அவரது நண்பரான குமாா் ஆகியோரிடமிருந்து ரூ.2.75 லட்சத்துக்கு பின்னலாடைத் துணிகளை வாங்கியுள்ளாா்.

இதன் பின்னா் துணிகளுக்குப் பணம் கொடுப்பது காலதாமதமாகியுள்ளது. இதன் காரணமாக சலாவுதீன் (40), முபாரக்(40), குமாா் (38) ஆகிய 3 பேரும் சோ்ந்து அப்துல் முனாபை சனிக்கிழமை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து அப்துல் முனாபின் மகன் ரியாஸ் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் சலாவுதீனை கைது செய்ததுடன், அப்துல் முனாபையும் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முபாரக், குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.