லாட்டரி விற்றவா் கைது

பெருமாநல்லூா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெருமாநல்லூா் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பெருமாநல்லூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணக்கம்பாளையம், காமாட்சி நகரைச் சோ்ந்த பழனிசாமி (65) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com