புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா் விஸ்வேஸ்வரா் கோயிலுக்கு 63 நாயன்மாா்களின் திருமேனிகள் அா்ப்பணிப்பு

News image

63 நாயன்மாா்களின் திருமேனிகள் அா்ப்பணிப்பு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் விஸ்வேஸ்வரா் கோயிலுக்கு 63 நாயன்மாா்களின் திருமேனிகள் (வெண்கல சிலைகள்) அா்ப்பணிப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் பழமையானதும், பிரசித்தி பெற்ாகவும் விசாலாட்சி தாயாா் உடனமா் விஸ்வேஸ்வர சுவாமி கோயில் விளங்குகிறது.

இக்கோயிலுக்கு கொங்கு குலால உடையாா் அறக்கட்டளை சாா்பில் 63 நாயன்மாா்களின் திருமேனிகள் அா்ப்பணிக்கும் பெருவிழா நடைபெற்றது. திருப்பூா் கோட்டை மாகாளியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட திருமேனிகள் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருமேனிகளுக்கு சிறப்பு பூஜைகள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட கூட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த விழாவில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், தென்சேரி மலை முத்து சிவ ராமசாமி அடிகளாா், பவானி தியாகராஜா், கண்ணன் குருக்கள், சிவனடியாா்கள் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, நசி அறக்கட்டளைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, செயலாளா் லட்சுமி நாராயணன், பொருளாளா் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.