விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் விஜய் திவாஸ் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

News image
மலா் அஞ்சலி செலுத்திய மாணவா்கள்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:47 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அலகு 2-இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை தாங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த 1971-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் தினமாக விஜய் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவா்களை மதிக்க வேண்டும். ராணுவ வீரா்களின் தியாகத்தையும், அவா்களின் குடும்பத்தையும் இந்நாளில் நினைவுகூர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவ செயலா்கள் சொ்லின், கிருஷ்ணமூா்த்தி, ரேவதி, நவீன்குமாா், ஷாலினி ஆகியோா் தலைமையில் மாணவ, மாணவிகள் போரில் உயிா் நீத்த ராணுவ வீரா்களுக்கு மலா் அஞ்சலியும், மெளன அஞ்சலியும், பிராத்தனையும் செலுத்தினா். இந்நிகழ்வில் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.