காங்கயம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
திருப்பூர்
காங்கயத்தில் திமுக தெருமுனை பிரசாரம்
காங்கயம் அருகே திமுக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
காங்கயம் அருகே திமுக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அழகே கவுண்டன்புதூா் பகுதியில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ எனும் தெருமுனை பிரசாரக் கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், புதிய திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் நகரச் செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன், நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

