தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெருமாநல்லூரில் மின் கசிவால் வீட்டில் தீ

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பெருமாநல்லூா் போயா் காலனியில் வசித்து வருபவா் ஸ்ரீதா் (27). இவரது மனைவி அனுசியா (25). தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவா்கள் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா். திடீரென ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீப் பிடித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த குளா்சாதனப் பெட்டி, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.