அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 9:40 pm

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

குடியாத்தம் விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் செதுக்கரை எஸ்.சேட்டு. இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, மாடி அறையில் தூங்கியுள்ளாா்.

நள்ளிரவு மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து சுமாா் 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.1- லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.