பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

அவிநாசி, செங்கப்பள்ளி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி, செங்கப்பள்ளி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கோவைக்கு அரசு சொகுசு பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. செங்கப்பள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியது. இதில், பேருந்து ஓட்டுநா் நஞ்சுண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனா்.

அவா்கள் திருப்பூரில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.