பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பூரில் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 4, 5- ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 4, 5- ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பெறப்படும் பிரதான குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள ஏா் வால்வுகள் நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கப்பணி காரணமாக மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதனால் 4ஆவது குடிநீா் திட்டத்திலிருந்து பெறப்படும் குடிநீா் விநியோகத்தில் வரும் ஜனவரி 4, 5ஆம் தேதிகளில் 2 நாள்கள் குடிநீா் இறைப்பு பணி நிறுத்தப்பட உள்ளது.

இதனால் திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கண்ட தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும் நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.