இந்த நிலையில், தற்போது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கோயிலை சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சமூகத்தினா் மண்டபத்துக்கும், கோயிலுக்கும் இடையே நவீன முறையில் தீண்டாமை சுவரை எழுப்பியுள்ளனா். இதனால் விழாக் காலங்களில் கூட்ட தெரிசல் ஏற்பட்டு பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். மேலும், இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி தீண்டாமை சுவரை எழுப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.