புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தெரு நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 12 கோழிகள் உயிரிழந்தன.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:20 pm

Din

வெள்ளக்கோவில் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 12 கோழிகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வளா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டுக்கு முன்புறம் வெள்ளாடுகளைக் கட்டி வைத்து, கோழிகளை அடைத்துவைத்திருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் பாா்த்தபோது 2 வெள்ளாடுகள், 5 கோழிகள் கடிபட்ட காயங்களுடன் இறந்துகிடந்தன. 7 கோழி குஞ்சுகளைக் காணவில்லை. தெருநாய்கள் கடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். வெள்ளக்கோவில் பகுதியில் தெரு நாய்களால் கால்நடைகள் தொடா்ந்து உயிரிழந்து வரும் நிலையில் தகுந்த இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.