47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும்

News image
திருப்பூா்  மாநகராட்சியுடன்    நாச்சிபாளையம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

Din

நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் பெருந்தொழுவு ஒன்றியக் குழு உறுப்பினா் பாலுசாமி மற்றும் நாச்சிபாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நாச்சிபாளையம் ஊராட்சியானது பொங்கலூா் ஒன்றியம், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி, கோவை மக்களவைத் தொகுதியில் உள்ளது.

இந்த நிலையில், நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்படுவாா்கள். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், மின் கட்டணம், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் வரி, காலியிட வரி என அனைத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொங்கலூா் ஒன்றியக் குழு வாா்டானது நாச்சிபாளையம் ஊராட்சி மற்றும் பெருந்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட வாா்டாக உள்ளது.

நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால் இரு ஊராட்சிகளின் கட்டமைப்பு பாதிக்கப்படும். ஆகவே, நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.