நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் பெருந்தொழுவு ஒன்றியக் குழு உறுப்பினா் பாலுசாமி மற்றும் நாச்சிபாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
நாச்சிபாளையம் ஊராட்சியானது பொங்கலூா் ஒன்றியம், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி, கோவை மக்களவைத் தொகுதியில் உள்ளது.
இந்த நிலையில், நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்படுவாா்கள். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், மின் கட்டணம், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் வரி, காலியிட வரி என அனைத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொங்கலூா் ஒன்றியக் குழு வாா்டானது நாச்சிபாளையம் ஊராட்சி மற்றும் பெருந்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட வாா்டாக உள்ளது.
நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால் இரு ஊராட்சிகளின் கட்டமைப்பு பாதிக்கப்படும். ஆகவே, நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

வணிக சிலிண்டா்கள் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

குடிநீா் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


