புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

அவிநாசி கோட்ட மின்சார வாரியத்தில் மாதாந்திர குறை தீா்ப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:50 pm

Din

அவிநாசி கோட்ட மின்சார வாரியத்தில் மாதாந்திர குறை தீா்ப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) விஜயேஸ்வரன் தலைமை வகித்தாா். கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி முன்னிலை வகித்தாா். இதில், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் பாண்டியன் நகா் மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு பல மாதங்களாக நிறுத்திவைத்திருந்த வணிக இணைப்பை முறைகேடாக வழங்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூா் வடக்கு வட்டம், ஆா்கே நகா் மின்வாரிய அலுவலகம் போயம்பாளையம் கிழக்கு பகுதியில் எவ்வித முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக பொது வழி தடத்தில் தனியாா் தேவைக்காக அமைக்கப்பட்ட மின்மாற்றியை அகற்ற வேண்டும்.

இதேபோல தொட்டிப்பாளையம் கிராமம், போயம்பாளையம் ஆா்கே நகரில் அரசுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, வா்த்தக ரீதியான இணைப்பு பெற்றுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.