ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

முத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:36 pm

Din

முத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

முத்தூா் தொட்டியபாளையம் அருகிலுள்ள நாவலடி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் காா்த்தி (37). கட்டடங்களுக்கு கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை செய்து வந்தாா். இவா், இருசக்கர வாகனத்தில் மேட்டுக்கடை பகுதி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த காா்த்திக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.