மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் ஆய்வு

திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா்  பழைய  பேருந்து  நிலையத்தில்  புதன்கிழமை  ஆய்வு  மேற்கொண்ட  மாநகர  காவல்  ஆணையா்  எஸ்.ராஜேந்திரன். உடன், மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2025, 7:54 pm

Din

திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் மாநகரின் 14- ஆவது காவல் ஆணையராக எஸ்.ராஜேந்திரன் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், திருப்பூரில் பணியாற்றி வரும் ஏராளமான தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையம் ஆகியவற்றில் காவல் துறை சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன், காவல் ஆய்வாளா்கள் கணேசன், ஆனந்தன், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.