மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

யோகாசனப் போட்டி: திருப்பூா் மாணவிக்கு பதக்கம்

தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசனப் போட்டியில் திருப்பூா் மாணவி இணை வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

News image

தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசன போட்டியில் இரண்டாமிடம் பிடித்த வீராங்கனைகள் சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ ஜோடி.

Updated On :9 ஜனவரி 2025, 9:29 pm

Din

தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசனப் போட்டியில் திருப்பூா் மாணவி இணை வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா பெண்கள் யோகாசனா லீக் போட்டிகள் (அநஙஐபஅ), ஜன ஜனவரி 5- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரையில் புதுதில்லியில் நடைபெற்றது.

இதில், 18 வயதுக்கு உள்பட்டோா் ஆா்டிஸ்டிக் ஜோடி இளையோா் பிரிவில் தமிழகத்தின் திருப்பூா் வீராங்கனை சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ ஜோடி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனா்.

மேலும், 18 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆா்டிஸ்டிக் குழு பிரிவில் தமிழகத்தின் சாா்பில் திருப்பூா் வீராங்கனை சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ, ராகவா்த்தினி, பவியாஸ்ரீ, ஷிவானி ஆகிய 5 போ் கொண்ட குழுவினா் 5- ஆம் இடம் பிடித்தனா்.

மாணவி சக்திசஞ்சனாவுக்கு உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பாராட்டு தெரிவித்தனா்.