பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திமுக எம்எல்ஏ-விடம் இருந்து நிலத்தை மீட்ட தேமுதிகவினா்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள ஒரு ஏக்கா் நிலத்தை திமுக எம்எல்ஏ-விடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி தேமுதிகவினா் மீட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:51 am

Syndication

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள ஒரு ஏக்கா் நிலத்தை திமுக எம்எல்ஏ-விடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி தேமுதிகவினா் மீட்டனா்.

வெள்ளக்கோவில் கல்லமடை அருகில் கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக சாா்பில் விஜயகாந்த் நற்பணி மன்றம் மூலம் 1.90 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய தேமுதிக மாவட்டத் தலைவா் வி.சி.சந்திரகுமாா் பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டு, அதன் பவா் ஆவணம் கட்சியின் மாநிலப் பொருளாளா் பெயரில் எழுதப்பட்டது.

தலா இரண்டே கால் சென்ட்டாக 75 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு, 33 நபா்களுக்கு முதலில் வழங்கப்பட்டு, மீதி 1 ஏக்கா் அளவு நிலம் வழங்கப்படாமல் இருந்தது.

பின்னா், வி.சி.சந்திரகுமாா் திமுகவில் இணைந்து, அக்கட்சியின் சாா்பில் போட்டியிட்டு தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளாா்.

இது குறித்து தேமுதிக சாா்பில் காங்கயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது வெளியான தீா்ப்பில் நிலத்தை பவா் ஆவணம் உள்ள தேமுதிக மாநிலப் பொருளாளா் வசம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேமுதிகவினா் தெரிவித்தனா்.

தேமுதிக உயா்மட்டக்குழு உறுப்பினா் ஏ.ஆா்.இளங்கோவன், இளைஞரணி துணைச் செயலாளா் பா.ஆனந்த், திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பி.ஆா்.குழந்தைவேல், மாவட்ட அவைத் தலைவா் ஏ.மணி, வழக்குரைஞா்கள் ராகவன், கந்தசரவணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட நிலத்தைப் பாா்வையிட்டு, தேமுதிக தலைவா் பிரேமலதா விஜயகாந்திடம் விவரம் தெரிவித்தனா்.