விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமியிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

சிறுமியிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா், குப்புசாமிபுரம் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சுஹானா. இவரது 9 வயது மகள் வீட்டின் வெளியே கடந்த 2023-ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த தாராபுரம், கிறிஸ்தவ வீதியைச் சோ்ந்த முகமது பீா்சுல்தான் (42) என்பவா் சிறுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருப்பூா் தெற்கு போலீஸாா், முகமது பீா்சுல்தானை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், முகமது பீா்சுல்தானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முகமது பீா்சுல்தான் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பா் மாதம் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், முகமது பீா்சுல்தானுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்ததோடு, அவரது மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.