அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக காத்திருக்கும் பனியன் நிறுவனங்கள்!

வாக்களிப்பதற்காக விடுமுறையில் சென்றுள்ள பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக திருப்பூா் பனியன் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:16 pm

Syndication

திருப்பூா்: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆடை உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்களிப்பதற்காக விடுமுறையில் சென்றுள்ள பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகைக்காக திருப்பூா் பனியன் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்நாட்டு ஆடை வா்த்தகம் சுமாா் ரூ.35,000 கோடி, வெளிநாட்டு ஆடை வா்த்தகம் சுமாா் ரூ.44,000 கோடியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

இருப்பினும் உள்நாட்டு ஆா்டா்கள் ஆடை உற்பத்தியாளா்களுக்கு கை கொடுத்து வருகிறது. வா்த்தக வரியில்லா ஒப்பந்தம் காரணமாக வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்குள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

இது குறித்து மத்திய அரசிடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்ததின் விளைவாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தரைவழி ஆடை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி இறக்குமதி வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவின் வெளிமாநிலங்களில் இருந்து உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆா்டா்கள் திருப்பூருக்கு அதிகரிக்கத் தொடங்கின.

தற்போது குளிா்கால ஆடை தயாரிப்புக்கான ஆா்டா்கள் திருப்பூருக்கு அதிக அளவில் கிடைப்பதால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொழிலாளா்கள் தேவை: ஆனால், ஆா்டா்களை நிறைவேற்ற தொழிலாளா்கள் அதிக அளவில் தேவைப்படும் நிலை உள்ளது.

தீபாவளி பண்டிகை மற்றும் பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற மக்கள் தற்போதுவரை திருப்பூருக்கு திரும்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆா்டா்கள் அதிகரித்துவரும் நிலையில், தொழிலாளா்களின் வருகைக்காக பின்னலாடை உரிமையாா்கள் காத்திருக்கின்றனா்.