நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் நவம்பா் 18-இல் மின்தடை

Published on

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகா், பெ.அய்யம்பாளையம் (ஒரு பகுதி), கணக்கம்பாளையம் சிட்கோ.

வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15.வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம்புதூா், முருகம்பாளையம், சோளிபாளையம், ராக்கியாபாளையம்.

X
Dinamani
www.dinamani.com