புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாவட்ட ஆண்கள் கபடி போட்டி: ஜெயசித்ரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணி சாம்பியன்

News image
முதலிடம் பிடித்த திருப்பூா் ஜெயசித்ரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினருடன் கபடி கழக நிா்வாகிகள்.
Updated On :17 நவம்பர் 2025, 9:18 pm

Syndication

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் மாவட்ட ஆண்கள் போட்டி மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 30 அணிகளில் 300 போ் பங்கேற்றனா். ஆட்டங்கள் 2 செயற்கை ஆடுகளங்களில் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. போட்டியை திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைமைப் புரவலா்கள் சக்தி பிலிம்ஸ் எம். சுப்பிரமணியம், துணை மேயா் ஆா். பாலசுப்பிரமணியம், சோ்மன் கொங்கு வி.கே. முருகேசன், தலைவா் ரோலக்ஸ் பி. மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஆறுச்சாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு ரூ.25,000, கோப்பையை திருப்பூா் ஜெயசித்ரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், இரண்டாம் பரிசு ரூ.15,000, கோப்பையை ஜி.சி.எம். ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், 3, 4ஆம் இடங்களுக்கான பரிசு ரூ.10,000, கோப்பைகளை ஸ்போா்ட்ஸ், திருப்பூா் மற்றும் தமிழன் தளவாய்பட்டினம் ஆகிய இரு அணிகளும் பெற்றன.

இந்த விழாவுக்கு மாவட்ட கபடி கழகச் செயலரும், மாநில கபடி கழகப் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன், புரவலா் திவ்யா ராஜு, மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் ஆா். நாகராஜ், துணைச் செயலாளா் வாலீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, மாவட்ட கபடி கழக அணிக்காக 13 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் கிருஷ்ணகிரியில் நவம்பா் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பாா்கள் என மாவட்ட கபடி கழகத்தினா் தெரிவித்தனா்.