வெள்ளக்கோவிலில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பழனிவேல் (22). இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி ரோகினி (21).
தற்போது குடும்பத்துடன் முத்தூா் சாலை கொங்கு நகரில் வசித்து வந்தாா். இவா் இருசக்கர வாகனத்தில் தனது நண்பா் கண்ணனுடன் வள்ளியிரச்சல் சாலையில் இருசக்கர வாகனத்தில் நவம்பா் 16-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனிவேல் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த, அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

