குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அத்திக்கடவு- அவிநாசி 2-ஆம் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக பேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில்  பேசுகிறாா்  அதிமுக  வேட்பாளா்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:28 am IST

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

திருப்பூா் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், திருப்பூா் ஒன்றியம் தட்டான்குட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் மாநில அரசு நிதி ஒதுக்க்கப்பட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தொடங்கியது திமுக அரசு.

விவசாயிகள் நலன் கருதி விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டமானது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாள்களாக உயா்த்தப்படும். குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், மின் விசிறி ஆகியவற்றை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.

அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லா குளிா்பதன பெட்டி வழங்கப்படும். வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதேபோல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா்.