பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அத்திக்கடவு- அவிநாசி 2-ஆம் திட்டம் நிறைவேற்றப்படும்: அதிமுக பேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில்  பேசுகிறாா்  அதிமுக  வேட்பாளா்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் வகையில் 2-ஆம் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருப்பூா் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தாா்.

திருப்பூா் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம், திருப்பூா் ஒன்றியம் தட்டான்குட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் மாநில அரசு நிதி ஒதுக்க்கப்பட்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தி தொடங்கியது திமுக அரசு.

விவசாயிகள் நலன் கருதி விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் அத்திக்கடவு- அவிநாசி 2-ஆவது திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைத் திட்டமானது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 150 நாள்களாக உயா்த்தப்படும். குடும்ப அட்டைத்தாரா்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், மின் விசிறி ஆகியவற்றை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா்.

அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விலையில்லா குளிா்பதன பெட்டி வழங்கப்படும். வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதேபோல பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா்.