அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா நிா்வாகிகள் கலந்துரையாடல்

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.

News image

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா நிா்வாகிகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:41 pm

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.

இது தொடா்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஜவுளித் துறை கண்காட்சியில் ஜவுளித் துறை ஆணையா் விருந்தா மனோகா் தேசாய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருடன் சைமா சங்கத் தலைவா் பி.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் ஆா்.தாமோதரன், சிஎம்ஏஐ சங்கத் தலைவா் சந்தோஷ் கட்டாரியா ஆகியோா் ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள 43 ‘பி’ சட்ட விதிகளின் மாறுதல் குறித்து கலந்துரையாடினா்.

அப்போது, ஜவுளித் துறையின் முன்னேற்றம் குறித்த கோரிக்கையை ஏற்று ஜவுளித் துறை ஆணையா் திருப்பூருக்கு மே மாதம் வருகை புரிவதாகத் தெரிவித்துள்ளாா். இந்த சந்திப்பு தொழில் துறை சூழலின் மிக முக்கியமான ஒரு மைல் கல் என்பதோடு, அரசுக்கும் தொழில்முனைவோருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவை வெளிப்படுத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.