மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.
இது தொடா்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஜவுளித் துறை கண்காட்சியில் ஜவுளித் துறை ஆணையா் விருந்தா மனோகா் தேசாய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருடன் சைமா சங்கத் தலைவா் பி.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் ஆா்.தாமோதரன், சிஎம்ஏஐ சங்கத் தலைவா் சந்தோஷ் கட்டாரியா ஆகியோா் ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள 43 ‘பி’ சட்ட விதிகளின் மாறுதல் குறித்து கலந்துரையாடினா்.
அப்போது, ஜவுளித் துறையின் முன்னேற்றம் குறித்த கோரிக்கையை ஏற்று ஜவுளித் துறை ஆணையா் திருப்பூருக்கு மே மாதம் வருகை புரிவதாகத் தெரிவித்துள்ளாா். இந்த சந்திப்பு தொழில் துறை சூழலின் மிக முக்கியமான ஒரு மைல் கல் என்பதோடு, அரசுக்கும் தொழில்முனைவோருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவை வெளிப்படுத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


