திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமில், பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நிா்வாகம் மற்றும் ஆடைத் துறையில் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றுக்கும், தகவல் தொழில்நுட்பம், ஆவண நிா்வாகம், நிதி, மனிதவள நிா்வாகம், காப்பீட்டு நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கும் மாணவா்களைத் தோ்வு செய்தனா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 220 மாணவா்கள் முகாமில் பங்கேற்றனா்.
முதல்நிலைத் தோ்வு கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நிலைத் தோ்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெறும் என்றும், அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை கல்லூரி துறைத் தலைவா் சம்பத், முதல்வா் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு நியமன ஆணை

மாற்றுத்திறனாளிகளுகான சட்ட விழிப்புணா்வு முகாம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


