தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:45 pm

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமில், பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நிா்வாகம் மற்றும் ஆடைத் துறையில் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றுக்கும், தகவல் தொழில்நுட்பம், ஆவண நிா்வாகம், நிதி, மனிதவள நிா்வாகம், காப்பீட்டு நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கும் மாணவா்களைத் தோ்வு செய்தனா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 220 மாணவா்கள் முகாமில் பங்கேற்றனா்.

முதல்நிலைத் தோ்வு கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நிலைத் தோ்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெறும் என்றும், அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை கல்லூரி துறைத் தலைவா் சம்பத், முதல்வா் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.