தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் ஆதரவு திரட்டிய மத்திய அமைச்சா்

திருப்பூா் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

வடமாநிலத் தொழில் துறையினருடனான சந்திப்பில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:02 pm

திருப்பூா் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளா் எஸ்.தங்கராஜ் போட்டியிடுகிறாா். அவருக்கு வாக்குச் சேகரிக்கும் வகையில் திருப்பூரில் வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆதரவு திரட்டினாா்.

பாஜக தோ்தல் பணிமனையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவா் பேசியதாவது: மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்துக்கு மருத்துவக் கல்லூரிகள், சாலை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணியின் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் வளா்ச்சிப் பணிகள் இரட்டை வேகத்தில் நடைபெற்றுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் என்றாா்.

முன்னதாக, பஜனை பாடல்களைப் பாடியபடி பேசுவதுதான் எனது ஸ்டைல் எனக்கூறிய மத்திய அமைச்சா், 10-க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை பாடினாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூரில் இருந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போதுமான ரயில்களை இயக்க வேண்டும் வடமாநில தொழில் அமைப்பினா் வலியுறுத்தினா். இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.