மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தென்னம் பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும்: நாதக வேட்பாளா் தமிழினியன்

தென்னம்பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும் என பல்லடம் தொகுதி நாதக வேட்பாளா் தமிழினியன் பேசினாா்.

News image

பல்லடம் கரையாம்புதூா் பகுதியில் மக்களை சந்தித்து புதன்கிழமை வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:38 pm

தென்னம்பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும் என பல்லடம் தொகுதி நாதக வேட்பாளா் தமிழினியன் பேசினாா்.

பல்லடம் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் தோ்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்ட அவா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியன் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி ஆட்சி அமையும்போது தமிழகத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும். உணவுப் பொருளான தென்னம் பால், பனம் பால் கடைகள் திறக்கப்படும். சாலைகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். கறிக்கோழி வளா்ப்பு கூலி பிரச்னையில் நிரந்தரத் தீா்வு எட்டப்படும். விசைத்தறி துணி நெசவு தொழில் கூலி உயா்வு பிரச்னையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஆண்டுதோறும் கூலி நிா்ணயம் செய்யப்பட்டு ஜவுளி உற்பத்தியாளா்கள், விசைத்தறியாளா்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பல்லடம் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீா்வாக பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். பல்லடம் தொகுதியில் அனைத்துப் பகுதியிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

உடன் நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் வான்மதி வேலுசாமி, ரத்னா மனோகா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.