மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - டிஎன்எஸ்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:34 pm

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 42-ஆவது வாா்டு அயன் நகா் 5-ஆவது வீதியில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கனில் பாகம் எண், வரிசை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு வீடுவீடாக வியாழக்கிழமை கொடுக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரின்பேரில் அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் டோக்கன் விநியோகித்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் துண்டுப் பிரசுரம் வழங்கியதாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து அவா்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களை அங்கு வரவழைத்து அவா்களிடம் இருவரையும் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.