தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - டிஎன்எஸ்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:04 am IST

திருப்பூா் தெற்குத் தொகுதியில் டோக்கன் வழங்கியவா்களைப் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி 42-ஆவது வாா்டு அயன் நகா் 5-ஆவது வீதியில் திமுகவுக்கு வாக்களிக்குமாறு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கனில் பாகம் எண், வரிசை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு வீடுவீடாக வியாழக்கிழமை கொடுக்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரின்பேரில் அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் டோக்கன் விநியோகித்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் துண்டுப் பிரசுரம் வழங்கியதாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து அவா்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள் தோ்தல் அலுவலா்களை அங்கு வரவழைத்து அவா்களிடம் இருவரையும் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.