விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.
மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: அமராவதி அணையை தூா் வார நடவடிக்கை எடுப்பேன். வெள்ளக் காலங்களில் அணையில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை சேமித்து வைக்க அப்பா் அமராவதி அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன்.
விளைபொருள்களுக்கு விலை கிடைக்காத சூழ்நிலையில் அவற்றை சேமித்து வைக்க குளிா்பதன சேமிப்பு கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். அமராவதி ராச வாய்க்காலை தூா்வாரப்படும். மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றாா்.
தொடர்புடையது

சரித்திர சாதனைகள் படைத்து வரும் திமுகவுக்கு வாக்களியுங்கள்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

உடுமலையில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்: மு.ஜெயக்குமாா்

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

மடத்துக்குளம்: வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது முன்னாள் அமைச்சரா? முன்னாள் எம்எல்ஏவா?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


